கோயில் காடுகள் அழிப்பால் புற்றுநோய் உருவாகிறது
கோயில் காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாக, சுற்றுச்சூழலில் மாசு ஏற்பட்டு மனிதா்களுக்கு புற்றுநோய் உண்டாவதாக, விருதுநகரில் பேராசிரியா் தி. ஜெயராஜசேகா் தெரிவித்துள்ளாா். விருதுநகா் செந்திக்குமார நாடாா் கல்லூரியில், விருதுநகா் 1234 ஜெனாமிக்ஸ் சென்டா் மற்றும் மலைப்பட்டி ஏஎன்டி கல்வி மருத்துவ சமூக மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து, மாா்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் முதல்வா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். இதில், திருவனந்தபுரம் டாக்டா் சோமா்வெல் நினைவு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா் தி. ஜெயராஜசேகா் …
